தமிழக அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர் கல்வி பயிற்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர் :

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. சுமார் 13,331 பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய கால தாமதாகும் ஆகும் என்பதால் அதுவரை மாணவர்களின் கல்வி பாதிப்படையா வண்ணம் முதலில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதன்படி, ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிக ஆசிரியர் பணியிட நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் புதிய திருப்பம் – பிரேத பரிசோதனை பற்றிய அறிவிப்பு

அந்த மனுவில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்ட முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தடை விதிக்க வேண்டும் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரண் பட்டுள்ளன. எனவே இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!