தமிழக அரசு பள்ளிகளில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறையாத நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்தொலைகாட்சி கொண்டு வரப்பட்டது. அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் நடைபெற்று வந்தது. அதனால் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி!
இந்த பணியிட நிரப்புதல் முற்றிலுமாக தற்காலிகமானவை என்றும் இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது உள்ள காலிப்பணியிடங்களுக்கு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 7,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.