மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 13% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 13% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 13% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 13% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்கி அளிக்கும் வகையில் அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. . இந்நிலையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும் பென்சனர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் 5 மற்றும் 6 வது ஊதியக்குழு ஊழியர்களுக்கும் DA உயர்வை அரசு வழங்கியுள்ளது.

அகவிலைப்படி (DA) 13% உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரு முறை என இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டு வாடகைப்படி உயர்வும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.இந்த சமீபத்திய உயர்வு மூலம், DA இப்போது அடிப்படை வருமானத்தில் 34% ஆகிவிட்டது. இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைகின்றனர்.

ExamsDaily Mobile App Download

 

இந்நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி , அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR)ஆகியவற்றை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தாது. மேலும் 5 வது ஊதிய கமிஷன் மற்றும் 6வது ஊதிய கமிஷன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, தற்போதைய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 381 சதவீதத்தில் அகவிலைப்படி இருக்கும்.

Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 OTT சேவைகளுடன் புதிய திட்டம் அறிமுகம்!

இதற்கு முன்னர் அகவிலைப்படி 368 சதவீதமாக இருந்தது. ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், ஆறாவது ஊதிய கமிஷன் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கெனவே இருந்த 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதாவது இது 7% அதிகரிக்கும். இந்த ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட டிஏ-வின் பலன் ஜனவரி 2022 முதல் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!