‘கொரோனா தடுப்பூசி முதல், மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை வரை’ – 13 அம்ச கோரிக்கைகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் டெல்லி சென்றுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13 அம்ச கோரிக்கைகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மனு அளித்துள்ளார்.
13 அம்ச கோரிக்கைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசின் துரித நடவடிக்கைகளின் பலனாக தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக தமிழக மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வாடிக்கையாளரா நீங்கள் – ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது!
அப்போது அவர் கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை, 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளார். அதன் பின்னர் இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும் தற்போது உடனடியாக ஒரு கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. எனவே அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கோரிக்கை தற்போது முதன்மையாக வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் மட்டுமல்லாமல் மாணவர் சேர்க்கையும் தொடங்காத நிலை உள்ளது. எனவே அந்த கல்லூரி மட்டுமல்லாமல் ஏனைய 11 மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என 13 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார்.