12வது உலக தமிழ் சங்க மாநாடு திருச்சியில் நடத்த முடிவு – தமிழக அரசு அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக உலக தமிழ் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டு 12வது உலக தமிழ் சங்க மாநாடு திருச்சியில் நடத்த முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சங்க மாநாடு:
உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் தமிழ் மொழியின் மூலமாக ஒன்று சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக தமிழ் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. அதாவது இந்த மாநாட்டின் மூலமாக தமிழையும், தமிழர்களின் பெருமையையும் உலகத்தவர்கள் அறிய வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் மொழியின் மீது முழு பற்றுக் கொண்ட அனைத்து தமிழர்களும் கட்டாயமாக இந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
முதன் முறையாக மலேசியாவில் தான் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டாவது முறையாக சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதுவரைக்கும் பதினோரு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்று விட்டது. இதனிடையே இந்த ஆண்டிற்கான 12வது உலக தமிழ் சங்க மாநாடு எங்கு நடைபெற இருக்கிறது என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு – செப்.12 முதல் தொடக்கம்!
Exams Daily Mobile App Download
அதாவது திருச்சியில் இந்த ஆண்டு 12-வது உலகத் தமிழ் சங்க மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைப் பக்கங்களிலும் திருச்சியில்தான் 12வது உலக தமிழ் சங்க மாநாடு நடைபெற இருக்கிறது என தகவல் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முன்பு திருச்சியில் 12வது உலக தமிழ் சங்க மாநாடு நடத்தப்படுமா என நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீமின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலை தமிழக அரசு அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்