தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு – அரசு தேர்வுத்துறை ஆலோசனை!!!
தமிழகத்தில் உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் நடக்க இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் – மாநில அரசு அறிவிப்பு!!!
அரசின் அறிவிப்பு:
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டனர். பொதுத்தேர்வுக்கு நாட்கள் குறைவாக உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு குறித்த மன அழுத்தத்துக்கு உள்ளாக கூடாது என்ற நோக்கில் தமிழக முதல்வர் 12ம் வகுப்பை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு:
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. மேலும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். தொடர்ந்து கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தொடர்ந்து தயாராகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்