கொரோனா பாதிப்பிலும் நடக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!
கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடத்தேர்வுகள் நடைபெற்றது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வரையில் அரசுப்பணிக்கான தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்கும்படி யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. வரும் 22 ஆம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
*Read More Latest Government Job 2020*
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது.
*Read More Bank Government Job 2020*
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் தொடங்கியது. அரசு அறிவுறுத்தலின்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.அதை அணிந்து கொண்டு மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்