தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

தேர்வின்றி தேர்ச்சி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 12ம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கோரிக்கை கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு வருவதை துரிதப்படுத்தவே சிபிஎஸ்இ வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை தவிர மற்ற அனைத்து சேர்க்கையும் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து தான் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடையே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையவழியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் ஜூன் 7 முதல் கடைகளை திறக்க அனுமதி? அரசு ஆலோசனை!

ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரையிலும் நடத்தப்பட்ட ஆய்வில் 5193 பேர் கலந்து கொண்டனர். அதில் தேர்வு வேண்டாம் என்று 61.4% மக்களும், 38.6% தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எதற்காக தேர்வு தேவை என்ற கேள்விக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு என்று 80.7% பெரும், வேலைவாய்ப்பிற்கு என்று 19.3% பெரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருது கணிப்பை அரசின் பரிசீலனைக்கு வைக்கிறோம். மாணவர்களுக்கு 9 ,10 மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 12ம் வகுப்புக்கான மதிப்பெண்களை வழங்கலாம்.

வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – கணக்கு முடக்கம்?

எதிர்காலத்தில் மதிப்பீடு முறைகளை அரசு மாற்றியமைக்க வேண்டும். மத்திய அரசு முடிவெடுக்கும் போது மாநில கல்வி வாரியங்களையும் ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களையும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உப குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் அவர்களும் , பொதுச் செயலாளரும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!