இந்தியாவில் 125 ரூபாய் சிறப்பு நாணயம் நாளை வெளியீடு – எதற்காக தெரியுமா?
இந்தியாவில் 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடவுள்ளார். மேலும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மக்களுடன் காணொலி மூலம் ஊரையாடவுள்ளார்.
சிறப்பு நாணயம் :
நாட்டின் முக்கியமான நபர் அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் முதன் முதன் முறையாக 1964 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாக அவரது பெயர் மற்றும் படத்துடன் கூடிய ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்திய பிரதமர் மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடவுள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் – பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு!
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்தை தோற்றுவித்து வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். வாமி பிரபுபாதாஜி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவி, பல புத்தகங்களை எழுதி, பக்தி யோகாவின் வழியை உருவாக்கியவர். இவரை சிறப்பிக்கும் விதமாக இவர் பிறந்த தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயம் நாளை காணொலி மூலம் வெளியிடப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மாலை 4:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மக்களுடன் உரையாற்றுகிறார். இந்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு முன்னதாக,இந்தியாவில் 75 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடபட்டது குறிப்பிடத்தக்கது.