12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் – ஏப்ரல் 16ம் தேதி முதல் தொடக்கம்!!!
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. மொத்தம் 20,583 மாணவ, மாணவிகள் அம்மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கின்றனர்.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. அதிலும் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது என்பது குறிப்பிடப்பிடத்தக்கது. வழக்கம் போல் இல்லாமல் நடப்பு ஆண்டில் செய்முறை தேர்வுகள் அனைத்தும் பள்ளிகள் அளவில் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? தலைமை செயலாளர் தீவிர ஆலோசனை!!
பள்ளிகளில் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகளை வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 202 மேல்நிலை பள்ளிகள் உள்ளது. அதில் 20,583 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு மையங்கள்:
செய்முறை தேர்வுகள் நாமக்கல் மாவட்டத்தில் 151 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுகள் நடக்க உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு மையங்களை தயார் செய்து வருகின்றனர். பொதுத்தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 83 மையங்களில் நடக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் தேர்வு மையங்களில் அறை கண்காணிப்பாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் நியமிக்கப்பட உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்