தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி, இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. தமிழகத்திலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் – முதல்வர் நியமன ஆணை வழங்கல்!
இந்நிலையில் அம்மாணவர்களுக்கான தேர்வு இறுதி மதிப்பீடுகளை வழங்குவது தொடர்பான வேலைகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வந்தது. இதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது தகவல் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக சென்னையில் செய்தியாளார்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதன் படி இன்னும் ஒரு சில தினங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு குறித்த பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டதா? என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் நாளை (ஜூலை 16) ஆலோசனை மேற்கொண்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.