தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் – மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் - மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் - மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் – மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 12 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், அதனால் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதன்படி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் சித்த மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், நேற்று முன்தினம் அம்மாணவியுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் மீண்டும் 172 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், மொத்தமாக 12 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், கொரோனா பாதிப்பு மற்ற மாணவர்களுக்கு பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் சமூக இடைவெளி கடைபிடித்து வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 12 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அச்சம் நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!