மத்திய அமைச்சர் அறிவிப்பு – இந்தியாவில் 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் !
மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ரூ.41,000 கோடி உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. இதன் மூலம் 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
பி.எல்.ஐ திட்டம்:
பி.எல்.ஐ திட்டத்திற்காக 22 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், அவற்றின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் ரூ. 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இன்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல, இது இந்தியாவிற்கு மட்டுமே சாதகமானது என்றும் சர்வதேச நிறுவனங்களுக்காக ரூ. 15,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள போன்கள் தயாரிக்கப்படுவதால் நேரடியாக 3 லட்சம் மற்றும் மறைமுகமாக 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் வின்ஸ்ட்ரான் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் விண்ணப்பத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |