தமிழக கூட்டுறவு வங்கிகளில் 12 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி – அரசு அறிவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்1) காலை வரை தகுதி பெற்ற 12 லட்சம் பயனாளிகளுக்கு தள்ளுபடி சான்றுடன் நகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
நகைக்கடன்:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தைகளை வரையறை செய்ய கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனை அடிப்படையாக வைத்து நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியானது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை – வலுக்கும் கோரிக்கை!
இதில் அரசு விதித்த நிபந்தனைகளின் படி ஏராளமானோர் தகுதி அற்றோர் பட்டியலில் இருந்தனர். அதனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நேரத்தில் 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்ததில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நேரத்தில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் சான்றிதழ் வழங்கும் பணி தாமதமானது. அதன் பிறகு தேர்தல் முடிந்ததும் நகர்ப்புறங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. பிறகு சான்றிதழ் பெற்றவர்களுக்கு நகைகளை ஒப்படைக்கப்பட்டது,
ஏப்ரல் 11 முதல் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
இதுவரை கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற தகுதி பெற்றவர்களில் நேற்று வரை 12 லட்சம் பயனாளிகளுக்கு தள்ளுபடி சான்றுடன் நகைகள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் படி 14.50 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 12 லட்சம் பயனாளிகளிடம், 4,750 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் மற்றும் நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.