ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் – பணியாளர் சேமநல நிதி நிறுவனம் தகவல்!
இந்தியாவில் ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் சேமநல நிதி நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதில் 8.1 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் ஆவர்.
பிஎப் கணக்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்ட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். வணிகம் முடங்கியதால் உரிமையாளர்களால் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் மாத ஊதியமின்றி அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். தற்போது வரை கொரோனா பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டு தொற்று தடுப்பூசிகள் பயன்பட்டால் தொற்று குறைந்து வருகிறது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு குடியுரிமை – மத்திய அரசு பதில்!
மேலும் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. அடுத்தபடியாக தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி ஊழியர்களை பணி நியமனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் வேலை இல்லாமல் சிரமப்பட்டவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தமாக 12.8 லட்சம் பேர் பிஎப் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜூன் மாதத்தில் 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சேமநல நிதி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள், 8.1 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் இவர்கள் பணியாளர் சேம நல நிதி திட்டத்தின் சமூக பாதுகாப்பு கவரேஜின் கீழ் சேர்ந்துள்ளனர். இதே நேரத்தில் 4.7 லட்சம் பிஎப் உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இவர்கள் வேறு நிறுவன பிஎஃப் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். ஜூன் மாதத்தில் இணைந்தவர்களில் 6.1 லட்சம் பேர் 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்று சேமநல நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.