மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

0
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

இந்திய நாட்டில் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்கும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஓராண்டில் மூன்று தவணைகளாக ரூ.2,000 மொத்தம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திட்டம் தொடங்கியதில் இருந்து 11வது தவணைத் தொகை வெகு விரைவில் கிடைக்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

முழு விவரம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,680க்கு விற்பனை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதுவரை PM-KISAN திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது இந்நிலையில் 11ஆவது தவணை தொகையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், விவசாயிகளாக உள்ள நமது சகோதர, சகோதரிகளை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. விவசாயிகள் மேம்படுத்தப்பட்டால் புதிய இந்தியா இன்னும் வளம் மிகுந்ததாக மாறும். பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டம் மற்றும் வேளாண் துறை சார்ந்த இதர அரசு நலத் திட்டங்கள் ஆகியவை, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலம் கொடுப்பதாக அமைந்துள்ளன என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் வழக்கமான நடைமுறைபடி, வருடத்தின் 3 வது தவணை பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வரும். அதன்படி இம்மாத இறுதிக்குள் பிஎம் கிசான் 11வது தவணை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் அவரவர் விண்ணப்பத்தைப் புதுப்பிக்கவும், இந்த திட்டத்தின் கீழ் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டாலும் அதற்கு தீர்வு பெறலாம். ஹெல்ப் லைன் எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது மின்னஞ்சல் (155261 அல்லது 1800115526 011-23381092 , [email protected] அனுப்புவது) மூலமோ  மூலமோ தீர்வைப் பெறலாம்.

1. தவணைத் தொகை நிலையை சரிபார்க்க, முதலில் PM Kisan வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.

2. உள்ளே சென்றதும் farmers corner வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது Beneficiary Status விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4. ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிடவும்.

5. இதற்குப் பிறகு உங்கள் நிலையைப் பற்றிய முழுமையான தகவலை தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!