PM கிசான் பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைப்பணம் தாமதமாக வருவதற்கான காரணங்கள் இதுதான்!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப்பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாற்றுவதில் தாமதம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணங்கள் குறித்த சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
PM கிசான் நிதியுதவி
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் என்பது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு நிதியுதவி திட்டமாகும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் குறைந்தபட்ச வருமானமாக ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வரை பெறுகிறார்கள். இந்த 75,000 கோடி திட்டமானது இந்தியாவில் உள்ள 125 மில்லியன் விவசாயிகளுக்கு நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், அவர்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – திசை மாறும் ‘அசானி’ புயல்!
அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகள் இதுவரை 10 தவணைக்கான நிதியை பெற்றுள்ளனர். இருப்பினும், பிரதமர்-கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணை இன்னும் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. சமீபத்தில், விவசாயிகள் தங்கள் கணக்குகளில் ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கான தவணையை மே 15 அன்று பெற்றனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்ட PM Kisan eKYC செயல்முறையை முடிக்க பயனர்களுக்கு மே 31 கடைசி தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையை முடித்தால் மட்டுமே 11வது தவணைக்கான பணம் கிடைக்கும். அந்த வகையில் PM கிசான் யோஜனாவின் 11வது தவணை நிதியுதவி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குப் பின்னால் உள்ள சாத்தியமான 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்.
eKYC:
கடந்த ஆண்டைப் போலல்லாமல், இந்த ஆண்டு eKYC செயல்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றும் அதை முடிப்பதற்கான கடைசி தேதி மே 31 ஆகும். இந்த செயல்முறையை முடிக்காதது நிதியுதவி தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
நிலம் வைத்திருக்கும் வரம்பு:
ஆரம்பத்தில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பணத்தைப் பெற தகுதியுடையவர்கள். இருப்பினும், இந்த சலுகை இனி பொருந்தாது. அதே வெளியில் அனைத்து விவசாயிகளும் இப்போது நிதிஉதவி பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த மாற்றமும் தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
Exams Daily Mobile App Download
தகுதியில்லாத பயனாளிகளிடமிருந்து பணம் திரும்பப் பெறுதல்:
KYC முடிந்ததும், தகுதியற்ற பயனாளிகள் திட்டத்தின் கீழ் பெற்ற பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கப்படுவார்கள். அந்த வகையில் PM Kisan போர்டல் மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
கிசான் கிரெடிட் கார்டில் மாற்றங்கள்:
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்பது இந்திய அரசின் திட்டமாகும். இது விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது பிரதமர் கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கடன் பெறலாம்.
ஆவணங்களை அகற்றுதல்:
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு, உடல் ரீதியாக சரிபார்ப்பைப் பெறுவதற்கான தேவையை அரசாங்கம் குறைத்துள்ளது. மாறாக, விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் அமர்ந்து இத்திட்டத்தில் பதிவு செய்யலாம்.