மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 – இகேஒய்சி சரிபார்ப்பு செய்வது எப்படி?
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் ஆண்டுக்கு 3 தவணைகளாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை இதில் 10 தவணை வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 11வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரதான் கிசான் திட்டம்
இந்திய நாட்டில் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். அதனால் இவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை என மொத்தம் ரூ.6000 உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளி விடுமுறை அறிவிப்பு – தீ விபத்து எதிரொலி! நிர்வாகம் நடவடிக்கை!
இந்த திட்டத்தில் இதுவரை 10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 11வது தவணை தொகைக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது 11வது தவணை தொகையை பெற சில விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதாவது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகள் 11வது தவணைக்கு இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கு வருகிற மே 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் செய்து முடித்து விடலாம்.
இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான வழிமுறைகள்
1. முதலாவதாக pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது இதில் இ-கேஒய்சி இன் இணைப்பு வலது பக்கத்தில் இருக்கும்.
2. இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
3. இப்போது 4 இலக்க OTP எண்ணை உள்ளிட வேண்டும். இதையடுத்து மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானைத் தட்ட வேண்டும்.
Exams Daily Mobile App Download
4. இப்போது 6 இலக்க ஓடிபி எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இறுதியாக இ-கேஒய்சி முடிக்கப்படும் அல்லது தவறானது என்று காணப்படும். இதில் தவறாக இருப்பின் ஆதார் சேவை மையத்திற்கு சென்று சரி செய்ய வேண்டும்.