மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தவணை தொகையை பெற இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது அவசியமாகும். தற்போது 11 வது தவணைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தவணை தொகை:

இந்தியாவில் வேளாண் தொழில் முதன்மை தொழிலாக உள்ளது. ஏராளமானோர் வேளாண் தொழிலை நம்பியே இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளை காக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் புதிய நல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல திட்டங்களை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் இடு பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும். தவணையை பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது விவசாயிகள் eKYC செயல்முறைகளை முடிக்க வேண்டியது அவசியமாகும். இதனை முறையாக முடித்தால் மட்டுமே தவணை தொகை சரியாக வங்கி கணக்கில் செலுத்த முடியும். இதுவரை பிஎம் கிசான் திட்டத்தில் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. 11 வது தவணை தொகை வரவுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மே 1ம் தேதி கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு!

இ-கேஒய்சி செயல்முறை:

  • முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் இ-கேஒய்சி என்பதை கிளிக் செய்து  உள் நுழைய வேண்டும்.
  • உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒடிபி send செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் மொபைலுக்கு 4 இலக்க ஓடிபி வரும் அதனை பதிவிட வேண்டும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் மற்றொரு 6 இலக்க ஓடிபி வரும். அதை நிரப்பி சமர்ப்பி என்பதைத் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!