தமிழகத்தில் ஒரே நாளில் 11,805 பேருக்கு கொரோனா – 267 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 267 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி, 11,805 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,78,298 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 30,068 பேர் தொற்றினால் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் – கள நிலவரம்!
இன்று ஒரே நாளில் 23,207 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,23,015 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 1,25,215 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,70,961 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும், 3,03,09,255 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் இன்று ஒரே நாளில் 793 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் அங்கு மொத்தம் 5,26,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 273 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், 69 அரசு மையங்களும், 204 தனியார் மையங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.