தமிழக பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவக்கம் – அரசின் வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மற்ற வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#ENGvsNZ டெஸ்ட் தொடர் வெற்றி – தரவரிசையில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து!
தற்போது 2021ம் ஆண்டின் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவது, மாணவர் சேர்க்கை, நலத்திட்டங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.
TN Job “FB Group” Join Now
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையும் தொடங்கி உள்ளது. பிளஸ் 1 சேர இருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் 9 வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் அந்தந்த பள்ளிகளில் 10ம் படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன் பிறகு மற்ற பள்ளிகளில் இருந்து வருவோருக்கு சேர்க்கை நடைபெற்று உள்ளது. 11ம் மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.