11ம் வகுப்பு அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறை புறத்தேர்வு செயல்முறை வெளியீடு!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பில் பொது தேர்வுகளின் போது செய்முறை தேர்வுகளில் பங்கேற்காமல் இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை புறத்தேர்வுக்கான அறிவிப்பை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் போது செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசு தேர்வு இயக்ககம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில், 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் போது செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறை புறத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இலவச ரேஷன் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு – மகிழ்ச்சியில் கார்டுதாரர்கள்!!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் வருகிற 22ம் தேதி அன்று www.deg1tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் பயனரின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த செய்முறை புறத்தேர்வானது வேறொரு பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று தற்போது தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் தங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று தேர்வை எழுதாமல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி இதற்கான மதிப்பெண், செய்முறை பதிவேடுக்கான மதிப்பெண் மற்றும் திறன் மதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும். மேலும் இந்த மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகிற மார்ச் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.