மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) & சம்பள உயர்வு – ஏப்ரல் 1 முதல் அமல்!
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA உயர்வு
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச மாநில அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 11 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், ‘மத்தியப் பிரதேச மாநில நிர்வாகம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 31% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன்பு, மாநில அரசு ஊழியர்களுக்கான DA தொகை 20% ஆக இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஷாக் – ஏப்ரல் 10 முதல் பூஜை, பிரசாத கட்டணங்கள் உயர்வு!
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 7 லட்சம் ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக மாநில அரசு ஊழியர்களின் DA தொகையை அரசால் உயர்த்த முடியவில்லை என்று சவுகான் கூறி இருந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்ட DA பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முதலமைச்சரின் அறிவிப்பின் கீழ், ‘லாட்லி லக்ஷ்மி திட்டத்தின்’ கீழ் மாணவிகளின் பட்டப்படிப்புக்காக அரசாங்கம் கூடுதலாக 25,000 ரூபாய் வழங்க இருக்கிறது.
அதே போல மற்ற திட்டங்களும் மாநிலம் முழுவதும் தொடரும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். இது தவிர ஹரியானா மாநில அரசும் ஜூலை 1, 2021 முதல், ‘ஹரியானா அரசு மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான DA தொகை 31 சதவீதமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்தது. மறுபுறம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34% DA உயர்வை மோடி அரசாங்கம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளமும் உயர்த்தப்படும்.