1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து தற்போது பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வரும் நிலையில் வருகிற ஜூன் 6ம் தேதி முதல் 11 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும் வழக்கம் போல வகுப்புகளில் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. கடந்த முறை 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்படும் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிஷா மாநில அரசு ஜூன் 6 முதல் 16ம் தேதி வரை 11 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் தற்போது கோடை விடுமுறை 48 நாட்களில் இருந்து 11 ஆக குறைக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சீனியர் மாணவர்களுக்கு ஜூன் 2 முதல் 20 வரை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டிற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில கல்வித்துறை செய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் பூஸ்டர் தடுப்பூசியினையும் செலுத்தி உள்ளனர். இதனால் கொரோனா 4வது அலை பரவலுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.