தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – 11 குழுக்கள் ஆய்வு!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தொடர்பாக ஆய்வு செய்ய கரூரில் இருந்து 11 குழுவினர் வந்துள்ளனர். இதனால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைக்கடன் ஆய்வு:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, மருத்துவ கட்டமைப்பு பணிகள் போன்றவற்றால் அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கிய அனைவருக்கும் கடன்களை தள்ளுப்படி செய்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.
சைனிக் பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனால் அரசு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்ககளில் கடன் வாங்கியவர்களின் மொத்த விவரங்களையும் சேகரித்து அதற்கேற்றவாறு நிபந்தனைகளை விதித்து நகைக்கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. இதற்காக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்களை சேகரிக்கும் பணிகளில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் இறங்கினர். அப்போது கூட்டுறவு சங்களில் நகைக்கடன் வழங்கியதில் பல மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு வயது குறைப்பு?
இதனை ஆய்வு செய்ய அரசு சார்பில் மாவட்டம் தோறும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வழங்கிய நகைக்கடன் தொடர்பாக ஆய்வு செய்ய கரூரில் இருந்து 11 குழுக்கள் வந்து சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் என மொத்தம் 254 கிளைகளில் நகைக்கடன் வழங்கியவர்கள், கடனுக்கு ஏற்ப நகைகள் இருப்பு உள்ளதா, நிலுவையில் உள்ள கடன்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தள்ளுபடி யாருக்குமே கிடையாது. குழு ஆய்வு வேற.