TNPSC Group 2, 2A தேர்வெழுதிய 11.78 லட்சம் பேர் – வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து!

0
TNPSC Group 2, 2A தேர்வெழுதிய 11.78 லட்சம் பேர் - வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து!
TNPSC Group 2, 2A தேர்வெழுதிய 11.78 லட்சம் பேர் - வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து!
TNPSC Group 2, 2A தேர்வெழுதிய 11.78 லட்சம் பேர் – வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1½ லட்சம் பேர் அதிகமாக தேர்வு எழுதினர். மேலும் தேர்வு எழுத வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்ற முதல்நிலை தேர்வு முடிவுகளை வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியிட TNPSC திட்டமிட்டுள்ளது.

Group 2, 2A தேர்வு:

தமிழகத்தில் 116 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கும், 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் இன்று குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11,78,175 பேர் எழுதினார்கள். இவர்களில் 4,96,247 பேர் ஆண்கள், 6,81,880 பேர் பெண்கள். மேலும் 48 பேர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களில் 14,531 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். இந்த வகையில் இரு கைகளும் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்றோருக்காக 1,800 பேர் தேர்வு எழுத உதவினர்.

Exams Daily Mobile App Download

இந்த வகையில் சென்னை மாநகரில் குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்காக 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த 7 மையங்களில் 1,15, 843 பேர் தேர்வு எழுதினர். மேலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோரில் இருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று குரூப்-2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 9 மணிக்கு பிறகு வரும் நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்னதாக TNPSC அறிவித்திருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு மையங்களுக்கு வந்தனர். இதையடுத்து நுழைவு சீட்டு, அடையாள அட்டை, மாஸ்க் அணிந்து உள்ளார்களா? என்பதை சரி பார்த்த பின்னர் அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

8 ம் வகுப்பு முடித்தவர்க்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

இதையடுத்து செல்போன்கள், பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நவீன கைக்கடிகாரங்கள், நவீன மோதிரம் மற்ற மின்னணு கருவிகள், மின்னணு அல்லாத பதிவுக் கருவிகள், புத்தகங்கள், பென்சில் புத்தகங்கள், தனித்தாள்கள், பொது குறிப்பு தாள்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. குரூப் 2 வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதி முடித்தோர் சற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!