தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் கல்வி பயின்றனர் என்ற விபரம் மதிப்பெண் சான்றிதழில் சேர்க்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பயிற்று மொழி சேர்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக தலைமையிலான அரசு சாதாரண மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பணிக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் பாடங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
AICTE வேலைவாய்ப்பு 2021 – செயலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதுவரை 10 மற்றும் 12ம் வகுப்பை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 1ம் வகுப்பு முதலே தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக 10ம் வகுப்பு பயிற்று மொழி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் 170 ஆசிரியர்கள், 170 ஆசிரியரல்லாத புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!
இந்நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர் என்ற விபரம் வகுப்பு வாரியாக 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் சேர்க்க தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நடப்பாண்டு முதலே தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்களின் வகுப்பு வாரியான பயிற்று மொழி விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்யுமாறு அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது