தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவின் முக்கிய விழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கியது முதல் பல கோவில்களில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் ஆடிமாத திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நாள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் அரசு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சம் – அமைச்சர் விளக்கம்
மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு தேர்வுகளுக்கு விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து திருவிழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.