தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அரசு அலுவலகங்கள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அரசு அலுவலகங்கள் & கல்லூரிகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அரசு அலுவலகங்கள் & கல்லூரிகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி அரசு அலுவலகங்கள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

தென்காசி மாவட்டத்தில் ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அம்மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் விழாக்களில் கலந்து கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதனையடுத்து அனைத்து மக்களும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் தற்போது தென்காசியில் ஆடித்தவசு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அம்மாவட்டத்தில் சங்கரன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிதவசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆடித்தவசு திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 2) ஆன்லைன் மாதிரித்தேர்வு

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடித்தபசு அன்று 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 13ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!