10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைனில் இல்லை – தேர்வு வாரியம் அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா கல்வி வாரியம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியது. இதனால் பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது காரணமாக தொற்றின் தாக்கம் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியின் நிலையை பொறுத்து பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கபட்டது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ கிளாஸ் – அரசு உத்தரவு!!
பொதுத்தேர்வுகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் மே 21ம் தேதி வரையிலும், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 20ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. தற்போது தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துமாறு கல்வித்துறைக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
நேரடி தேர்வுகள்:
மஹாராஷ்டிரா மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அவர்கள் இன்று பொதுத்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்கள் பொதுத்தேர்வுகளை காட்டாயம் தேர்வு மையங்களுக்கு சென்று நேரடி முறையில் தான் எழுத வேண்டும். எழுத்து தேர்வுகள் முடிந்த பின்னர் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும், பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்