10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத்தேர்வு வினாத்தாள்:
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பொதுத்தேர்வை சுலபமாக்க மாணவர்களுக்கு அரசு பல தளர்வுகளுடன் கூடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 22 டி.இ.ஓ காலிப்பணியிடங்கள் – சட்டமன்ற தேர்தலுக்குள் நிரப்ப கோரிக்கை!!
அவை, பாடத்திட்டங்களில் 35% பாடங்கள் குறைப்பு போன்றவை அடங்கும். மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டு நடத்தப்படும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் உண்டு என்று தெரிவித்த நிலையில் தற்போது வினாத்தாள்கள் தயாரிப்பு பணி நடைபெறுவதால் அதில் மாற்றங்கள் எதிர் பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு – பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த தொகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆசிரியர்கள் 2 கட்டங்களாக தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்க உள்ளனர். அவற்றில் இருந்து இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்