இந்தியாவில் அரிசி விலை 10% அதிகரிப்பு? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் அரிசி விலை 10% அதிகரிப்பு? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்தியாவில் அரிசி விலை 10% அதிகரிப்பு? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய அரிசி நுகர்வோர் நாடாக உள்ள இந்தியா, உலக அரிசி வர்த்தக சந்தையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கான வரியை 62.5 %ல் இருந்து 25 % ஆக குறைத்துள்ளதை அடுத்து, இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் பாசுமதி அல்லாத அரிசி விலை 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அரிசி விலை உயர்வு:

கொரோனா வருகையால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வங்கதேசம், கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பாசுமதி அல்லாத அரிசி இறக்குமதிக்கு அக்.31ம் தேதி வரை அனுமதியளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க கூடுமென்ற அச்சம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே இதுபோன்று இந்தியாவில் இருந்து வங்கதேசம் அரிசி இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை ஆகும். பொதுவாக, வங்கதேசம், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அரிசி இறக்குமதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

ரஷ்யா – உக்ரைன் போரின் போது கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால், வங்கதேசத்தில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் அங்கு மழை வெள்ளம் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கடந்த 5 நாட்களில் மட்டும், பாசுமதி அல்லாத இந்திய அரிசி வகைகள் விலை டன் ஒன்றுக்கு 350 டாலரில் இருந்து 360 டாலராக அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து அறிவிப்பு வெளியான பின்பு விலை அதிகரித்துள்ளது. கோதுமை விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி குறைவால், வங்கதேசத்தில் அரிசி, அரிசி மாவு விலையை அதிகரித்துள்ளது.

சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களில் திடீர் மாற்றம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இது தவிர வெள்ளம், பெருமழை காரணமாக அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், அங்கு அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஏற்கனவே அரிசி விலை 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வங்கதேசம் பொதுவாக, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும். இந்த 3 மாநிலங்களில் சாதாரண அரிசி விலை, 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. 3 மாநிலங்களில் அரிசி விலை உயர்வின் தாக்கம் காரணமாக, பிற மண்டலங்களில் அரிசி விலை 10% அளவுக்கு உயரக்கூடும் என்றும் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!