TN TRB 1,060 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் தேர்வுக்கான மாதிரிகள் வெளியீடு!
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இவை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் நிரப்படவுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுக்கான மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
டிஆர்பி:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளில் முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. அடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்க போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் & பதவிகள் – முழு விபரங்கள் இதோ!
அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது. அதனால் காலிப்பாணியிடங்களை நிரப்ப கோரி அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இதனை ஆராய்ந்து அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. பள்ளிகளை தொடர்ந்து அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவுப்பு வெளியாகி வருகிறது. தற்போது அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிபணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Post Office NSC சேமிப்பு திட்டம் – 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் போட்டித்தேர்வானது கணினி வழியில் நடக்க உள்ளதால், தேர்வானது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள தேர்வின் மாதிரி டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பெயர் மற்றும் விபரங்கள் குறித்து தேர்வின் மாதிரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.