TN TRBயின் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – முக்கிய தகவல் அறிவிப்பு!
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2021ம் ஆண்டு தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தேர்வு வாரியம் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மேலும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தேர்வு தேதியை எதிர்பார்த்து விண்ணப்பதாரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கான சான்றிதழ் சாிபார்ப்பிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான கணினி வழி தேர்வுகள் 8.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தேர்வர்களின் மதிப்பெண்கள் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு 15 பாடப்பிரிவுகளில் 5 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் ஆகியவை இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.