அரசுத் துறைகளில் உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – முதல்வர் உரை!
நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் உரையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பணியிடங்கள் நிரப்பல்:
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 15) பல்வேறு மாநிலங்களிலும் இவ்விழா கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடற்கரை சாலையின் காந்தி திடலில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொடியேற்றி துவங்கி வைத்தார். இதையடுத்து மக்களிடம் உரையாடிய அவர், ‘புதுச்சேரி மாநில முதல்வராக நான் பொறுப்பேற்றவுடன் முதியோர், விதவை, திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான நிதியுதவி ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் தகவல்!
அதே போல மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ மக்களுக்கும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 3.46 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு இதுவரை 7.60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரசின் திட்டங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு அரசுத் துறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படுவது முக்கியமாகும்.
அதனால் அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் ஏஎப்டி தொழிலாளர்களுக்கான தொகையை திரும்ப அளிக்கவும், அந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுவதும் சட்டம் ஒழுங்கு நடைமுறையை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி ரூபாய் செலவில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர பாரம்பரிய பள்ளிகளான கல்வே கல்லூரி சுமார் ரூ.4.80 கோடி மற்றும் வ.உ.சி. பள்ளி ரூ.2.81 கோடி செலவிலும் சீரமைக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து லாஸ்பேட்டை ECR சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும். மக்களின் ஒத்துழைப்போடு புதுச்சேரியை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாற்றுவோம்’ என கூறினார். இதையடுத்து புதுச்சேரி நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் கௌரவித்த பின்னர் சுதந்திர தின விழா நிறைவுற்றது.