தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 10,000 ஆசிரியர் காலியிடங்கள் – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பபடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் காலியிடங்கள்:
தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்தான அலுவல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என பலரும் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட வாரியாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
அதாவது, பழுதடைந்து இருக்கும் பள்ளிகளில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதாகவும், மரத்தடியில் நடைபெற்று வரும் வகுப்புகளுக்கு கட்டிடங்கள் கட்டி தரப்படும் எனவும், பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கூடிய விரைவில் நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை – ஆக.31க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம்!
அதாவது, LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவையான சிறப்பாசிரியர்களை கூடிய விரைவில் பணியமர்த்த வேண்டும் எனவும், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்க போவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்