தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று அதன் பின் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு ஊக்கத்தொகை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல சலுகைகளை வழங்கி இருக்கிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படிக்கும் மாணவிகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் தங்களுடைய கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு ஆவணம், 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GPay, Paytm பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 1 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன் படி ஜூலை 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவித் தொகை பெற அரசு பள்ளி மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்