Post Office தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் – ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
போஸ்ட் ஆபீஸ் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு உள்ள திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் முதிர்வு தொகை ரூ.20 லட்சம் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களில் அதிகமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் வங்கிகளுக்கு இணையாக மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக அளவு வட்டி விகிதத்தையும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – முன்னாள் அமைச்சர் கூறிய தகவல்!
இந்த திட்டத்தை ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என்பது சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான். இந்த திட்டம் மத்திய அரசால் ஆதரிக்கப்படும் முதலீட்டுத் திட்டம் என்பதால் முதலீட்டாளர்களின் பணம் வங்கிகளை விட அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 6.8 சதவீதம் ஆகும்.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் இந்த திட்டத்திற்கு முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனை தொடர்ந்து இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும். இந்த வகையில் நபர் ஒருவர் 5 ஆண்டுகளில் 15 லட்சம் முதலீடு செய்தால், வட்டி வருமானம் ரூ.6 லட்சம் கிடைக்கும் மற்றும் முதிர்வு தொகை ரூ.20.85 லட்சம் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் 1000 ரூபாயில் இருந்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.