தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – விபரங்கள் சேகரிப்பு!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்திருந்த திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றும் பணிகளுக்கான விவரங்களை சேகரிக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
உரிமைத் தொகை:
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது. அதில் பல வாக்குறுதிகள் செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. அந்த வகையில், முன்னர் அறிவித்த கொரோனா நிவாரணம் ரூ.4,000 வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் பதவி ஏற்றவுடன் கையெழுத்திட்டார்.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் மாத மின்கட்டணம்!
அதேபோல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு அனைத்து தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் அலுவலகத்தில், பொது விநியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவு வழங்கல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடும்ப தலைவிகளிடம் இருந்து அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கும் படி உத்தரவிடப்பட்டது. மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கின் விவரங்களை பெறவும், வங்கி கணக்கு இல்லாதவர்களை விரைந்து வங்கி கணக்கு துவங்கவும் அறிவுறுத்த கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் உணவு வழங்கல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விவரங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
V.good