தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைகளுக்கு மாதம் ரூ.1000? வெளியான தகவல்!
தமிழகத்தில் புதிய திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
ரேஷன் அட்டை:
தமிழக அரசு சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இரண்டு தவணையாக ரூ.4000 வழங்கப்பட்டது. மேலும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை பணியாளர் காலிப்பணியிடங்கள் – CEOக்களுக்கு உத்தரவு!
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை என அனைத்தும் ரேஷன் அட்டை மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தது. குறிப்பாக ரேஷன் அட்டைகள் குடும்பத் தலைவி பெயரில் இருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரேஷன் அட்டைகளை மாற்ற விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து தற்போது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் ரேஷன் கடைகளில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் இருக்கும். அதில் PHH குறியீடு இருந்தால் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். மேலும் PHH-AAY குறியீடு இருந்தால் 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். NPHH இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களும் வாங்கி கொள்ளலாம். NPHH-NC இருந்தால் ரேஷன் கடைகளில் எந்த பொருள்களும் வாங்க முடியாது. அதனை ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த 5 வகையான குடும்ப அட்டையில் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான அட்டைகளில் குடும்பத் தலைவி பெயரில் இருந்தால் மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் தேவையின்றி ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.