தமிழக மாணவிகளுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியதை அடுத்து தற்போது அதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மற்றும் இறுதி தேதி விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாதம் 1000 ருபாய்:
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை வருகிற ஜூலை 15 ஆம் தேதி அதாவது முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளாகிய அன்று முதல் தொடங்கவுள்ளதாக முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பு முகாமை கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்னும் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்த முகாமில் மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பப் பதிவில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளிடமிருந்து விவரங்கள் முதல் நாளிலே பெறப்பட்டதாக உயா்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு மீண்டும் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10ம் தேதி வரை உயர்கல்வித்துறை நீட்டித்தது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு இன்று தான் கடைசி நாளாகும். எனவே இன்னும் வரை விண்ணப்பிக்க தவறிய மாணவிகள் அதற்கான அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பித்து அதன் பலனை அடையலாம். மேலும், இதுவரை இத்திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.