தமிழக அரசு பேருந்துகளில் ரூ.1000 மாதாந்திர பாஸில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இருக்கும் 1000 ரூ பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பஸ் பாஸ் அட்டை ஏப்ரல் 23,24ம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பயண அட்டை
மக்களின் நலனுக்காக ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் தமிழகத்தில் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் படுத்தப்பட்டனர் . இந்த சலுகை எதற்கு என்றால் மக்கள் அனைவரும் வெகு தூரத்தில் இருந்து பயணம் செய்து பணிக்கு செல்கின்றனர். அதனால் மக்கள் வாங்கும் சம்பளத்திற்கு மேல் அதிகமான பணம் செலவழிக்கின்றனர். அதனடிப்படையில் தமிழக அரசு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆயிரம் ரூபாய் பயண அட்டை சலுகை என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ரூ.1000 பஸ் பாஸ் திட்டத்தினால் பல கோடி மக்கள் பயன் அடைகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா? தீவிரமாகும் கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!
கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வருடமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் எங்கும் செல்ல முடியாமல் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த 6 மாதங்களாக வழக்கம் போல் பஸ் போக்குவரத்து நடைமுறைக்கு வந்தது. அதனை தொடர்ந்து, ரூ.1000 சலுகை பயண அட்டை வழங்குவதற்கான பயண சீட்டு வாங்க ஆரம்பித்தனர்.
ExamsDaily Mobile App Download
ஒவ்வொரு மாதமும் 1ம் முதல் 22ம் தேதி வரை இந்த சலுகை பயண அட்டை வழங்கப்படும். இந்த மாதம் தொடர் விடுமுறை காரணத்தினால் இரண்டு நாட்கள் நீடித்து வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இம்மாதத்திற்கான ரூ.1000 பயண அட்டையை வாங்காதவர்கள் பயண அட்டையை வாங்கி பயன் பெறுங்கள்