தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1000 உதவித்தொகை! பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் ரூ.1000 உதவித்தொகை! பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மாதம் ரூ.1000 உதவித்தொகை! பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1000 உதவித்தொகை! பணிகள் தீவிரம்!

தமிழக அரசின், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்துக்கு, அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவியரின் பட்டியல் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் , முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை கடந்த மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்தது. சட்டசபையில் பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் பிடிஆர், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த CEO!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!