தமிழகத்தில் செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – டெல்லி முதல்வருக்கு அழைப்பு!

0
தமிழகத்தில் செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் - டெல்லி முதல்வருக்கு அழைப்பு!
தமிழகத்தில் செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் - டெல்லி முதல்வருக்கு அழைப்பு!
தமிழகத்தில் செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – டெல்லி முதல்வருக்கு அழைப்பு!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டும் பெண்கள் இடைநிற்றல் இன்றி கல்வியை தொடரும் நோக்கில் ரூ. 1000 உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முதல்வர் செப்டம்பர் 5ம் தேதி துவங்கி உள்ளார்.

புதுமை பெண் திட்டம்:

தமிழகத்தில் 6 – 12ம் வகுப்பு வரவு அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இருந்து வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை அரசு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் கவனத்திற்கு – உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியீடு!

இத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 10ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் அரசு சார்பாக வழிகாட்டுல்களும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை ஆசிரியர் தினத்தன்று (செப்.5) வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்லி சென்று முதல்வர் சார்பாக அழைப்பிதழை வழங்கினார்.

இந்த அழைப்பிதழை பெற்றுக் கொண்ட டெல்லி முதல்வர் டெல்லி முதல்வர் “அது தனக்கு கௌரவமானது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அவரது ட்விட்டரில் பதிவில் தமிழகம் வருமாறு என்னை அழைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறியுள்ளார். புதுமை பெண் திட்டத்தை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் 26 “தகைசால் பள்ளிகள்’ மற்றும் 15 “மாதிரிப் பள்ளிகள்’ திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!