தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – ரேஷன் கார்டில் புகைப்படம் மாற்றம் தீவிரம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை தரப்படும் அறிவிப்பு வெளியானதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலில் 5 வாக்குறுதிகளில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டார். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
2022 பத்ம விருதுகள் பரிந்துரைக்கு செப்டம்பர் 15 இறுதி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருந்ததால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்ற செய்தி பரவி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் குடும்ப தலைவி புகைப்படம் இடம் பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் பெண்களின் புகைப்படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னுரிமை கார்டில் 34,500 அந்தியோதயா அட்டையில் 11,000 மட்டுமே பெண்கள் புகைப்படம் சேர்க்க வேண்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது என கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் பெண்களின் புகைப்படம் மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் திடீரென ரேஷன் கார்டுகளில் பெண்களின் புகைப்படத்தை மாற்ற விண்ணப்பம் மற்றும் அதற்கான நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் ரேஷன் கார்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்று உணவு வழங்கல் துறைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.