தமிழக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லையா?
தமிழகத்தில் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிதியுதவி திட்டம், தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காது என்ற குழப்பங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
நிதியுதவி திட்டம்
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியினர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்த அறிவிப்பை நிறைவேற்றுவதோடு மக்களை கவரும் வண்ணம் பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதற்கான காரணத்தையும் அரசு அவ்வப்போது கொடுத்து வருகிறது. இதற்கிடையில் குடும்பத் தலைவிகளாக பெண்கள் இருக்கும் அட்டைதாரர்களுக்கு மட்டும் நிதியுதவி கிடைக்கும் என கூறி வந்த நிலையில், பலரும் புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் இந்த தகவல்கள் போலியானது என அரசு விளக்கம் கொடுத்தது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் அரசின் நிதியுதவி திட்டம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
தமிழக அரசில் ரூ.10,000 ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேரடி பணியமர்த்தல்!
இதையடுத்து நிதியுதவி வழங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களை ஆய்வு செய்கையில், நிதியுதவியை பெறுவதற்காக பலர் தற்போது தான் புதிய ரேஷன் அட்டைகளை வாங்கி வருவதாகவும், சில போலியான அட்டைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஒரு நபர் மட்டுமே இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு, ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படுவது இல்லை என்று அவ்வப்போது புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதே போல அரசின் நிதியுதவியும் கொடுக்கபடாது என்றும் கூறப்பட்டு வருகிறது. அதனால் ஒரு நபர் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருட்களை சிக்கல்கள் இல்லாமல் பெற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.