சென்னையில் கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம் – விநாயகர் சதுர்த்தி பண்டிகை!
செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கூடுதலாக 1,000 பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் வரும் 10 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முக்கியமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் எனவும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ எதிர்பார்ப்பு!
இதனிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி அரசு பொது விடுமுறையுடன் 3 நாட்களுக்கு தொடர்ச்சியான விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்கு வசதியாக கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுவது வழக்கம்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படம் – நீதிமன்றம் உத்தரவு!
அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி சிறப்பு பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 2,500 பேருந்துகளுடன் கூடுதலாக 1000 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன் படி 8 ஆம் தேதியன்று 300 பேருந்துகளும், 9 ஆம் தேதியன்று 600 பேருந்துகளும் இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக பேருந்துகளின் இயக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.