அரசுப்பள்ளி மாணவர்கள் பெயரில் ரூ.1000 வைப்புத்தொகை – சேர்க்கை விகிதம் உயர்வு!
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் புதிய மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் மாணவர்கள் உயரும் சேர்க்கை :
தமிழகத்தில் கடந்த வருடங்களில் அரசு பள்ளி மாணவர்களின் விகிதம் மிகவும் குறைந்து காணப்பட்டது. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை குறைவுக்கு, பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கல்வி தரம், அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாமை ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை போன்றவை காரணங்களாக கூறப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கும் அரசு பள்ளிகளை புறக்கணித்து கடன் வாங்கியேனும் அதிக பணத்தை செலுத்தி தனியார் பள்ளிகளை நோக்கி சென்றனர்.
புதுச்சேரி கலை, அறிவியல் கல்லூரி தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!!
தற்போது அரசின் சில நல திட்டங்களாலும் கல்வி ஊக்க தொகைகளாலும் கடந்த 2 வருடங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது திமுக தலைமையிலான அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பள்ளிகளின் நுழைவு வாயிலில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் அடங்கிய பேனர்களை வைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் சேர்க்கை படிவத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, 55 மாணவர்கள் மட்டுமே படித்தனர். மாணவர்களை எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் புதிதாக சேரும் மாணவர்களின் பெயரில் தலா ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் 10,000 ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும் எனவும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறிவித்தனர் இந்த அறிவிப்பு தந்தி டிவியில் ஒளிபரப்பானது அதன் விளைவாக ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது.