தமிழக கால்நடை துறையில் 1000+ காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக கால்நடை துறையில் 1000+ காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கால்நடை துறையில் 1000+ காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கால்நடை துறையில் 1000+ காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கால்நடை துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இப்பணியிடத்தில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கால்நடை துறையில் வேலை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக பொது மக்கள் கூட்டம் கூடும் அனைத்து விதமான நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியபட்டு அனைவராலும் செலுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் பின்பற்றபட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு CBIக்கு மாற்றம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!

இதையடுத்து நேற்று செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான புதிய மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியை வில்லியம்பாக்கத்தில் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து விதமான அரசு காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!

இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது தற்போது கால்நடை துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கால்நடை மருத்துவர்கள் தொடர்பான வழக்கு தற்பொழுது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குக்கான முடிவுகள் விரைவில் கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு தீர்ப்புகள் பெறப்பட்ட பின் கால்நடை துறையில் உள்ள 1450 மருத்துவர்க்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!