மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் – உத்தரகண்ட் மாநில மின்வாரியம் அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத்தில் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், பால் தொழில் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கான மின்சாரத்தை வீட்டு உபயோகப் பிரிவில் மாற்றுவதாகவும் மின்வாரியத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலவச மின்சாரம்:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வீட்டு உபயோக மின்சாரம் 100 யூனிட் அளவிற்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இதேபோல், உத்தரகண்ட் மாநிலத்திலும் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் – அரசுக்கு கோரிக்கை!
உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரக் சிங்க் ராவத் என்பவர் மின்துறை அமைச்சராக பதவியில் உள்ளார். இவர், மாநில மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மாநிலத்தில் இனி வீட்டு உபயோக மின்சாரத்தில் மாதந்தோறும் 100 யூனிட் இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாகவும், சுமார் 13 லட்சம் மின் நுகர்வோர் இந்த திட்டத்தின் மூலம் பலனடைவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதில் 50% சலுகை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து பால் தொழில் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களுக்கு வணிக பிரிவில் இருந்து வீட்டு உபயோக பிரிவாக மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.